அமெரிக்க விஞ்ஞானி, நார்வே தம்பதிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மூளை உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ'கீஃபே மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்திற்கு எப்படி நம்மால் சரியாக செல்ல முடிகிறது? அதே பாதையில் அடுத்த முறை செல்லும்போது எப்படி மூளை அதை நினைவில் வைத்துக் கொள்கிறது. செல்போன்களில் இருக்கும் ஜி.பி.எஸ். போல் மூளையில் செயல்படும் அந்த அணு எது? இதைத் துல்லியமாக கண்டுபிடித்து சாதனை புரிந்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஓ'கீஃபே, நார்வேயைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மே- பிரிட் மோசர், எட்வர் ஐ. மோசருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான வரைபடத்தை மூளையில் உருவாக்குகிறது என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம்.












Click it and Unblock the Notifications