2,850 அடி மலையை விலைபேசிய லட்சுமி மிட்டல்.... இங்கிலாந்தில் எதிர்ப்பு வலுக்கிறது
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையை தனியாருக்கு விற்க அந்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் ஒன்றான கும்பிரியாவின் லேக் மாவட்டத்தில் காணப்படுகிறது 2,850 அடி உயர பிலென்கத்ரா மலை. இது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது.
கடந்த 2006ஆம் ஆண்டு லோன்ச்டலே இறந்த பிறகு, அவரது சொத்துக்களுக்கு வாரிசு அரசுக்கு தான் செலுத்த வேண்டிய 9 மில்லியன் பவுண்டு வரி பாக்கிக்காக இம்மலையை விற்க முடிவெடுத்தார்.

மலை விற்பனைக்கு...
2,676 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைக்கான விற்பனை விலையாக 1.75 மில்லியன் பவுண்டு நிர்ணயிக்கப்பட்டது. மலையை விற்பனை குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது.

தனியார் வசம் செல்லக்கூடாது...
பல எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் ஊக்குவிப்பு சக்தியாக இருந்துள்ள இந்த மலைப்பகுதி தனியார்வசம் சென்றால் உயரடுக்கு செல்வந்தர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சம் விளம்பரத்தைக் கண்ட உள்ளூர் மக்களுக்கு உண்டானது.

சமூகச் சொத்தாக வேண்டும்...
மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது 'பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு'. இம்மலை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டு சமூக சொத்தாக மாற்றப்படவேண்டும் என இந்த இயக்கம் வலியுறுத்தியது.

கோரிக்கை நிராகரிப்பு...
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எச்-எச் சொத்து விற்பனை நிறுவனரான ஜான் ராப்சன் இதற்கான ஒரு விற்பனை வாய்ப்பும் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

கூடுதல் தொகை...
பின்னர், இந்த மலையை வாங்குவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தவர் இந்தியத் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் என்பதுவும், நிர்ணயிக்கப்பட்டுள்ள விற்பனைத் தொகையைவிடக் கூடுதலாக அவர் கேட்டிருப்பதுவும் வெளிச்சத்திற்கு வந்தது.

நியாயமான முடிவு...
இதனைத் தொடர்ந்து இந்த நண்பர்கள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், சொத்து வரி பாக்கிக்காக விற்பனை நடைபெற இருப்பதால் விரைவில் நியாயமான முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் எச்-எச் சொத்து விற்பனை நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications