எபோலாவை எதிர்த்து போராடாமல் வெளிநாட்டுக்கு ஓட்டம்?: 10 லைபீரிய மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ்
மான்ரோவியா: எபோலா நோய்க்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்து நாடு திரும்பாத 8 அமைச்சர்கள் மற்றும் 2 கமிஷனர்களை லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் அதிரடியாக பதவிநீக்கம் செய்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. இதில் லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது.
எபோலா வைரஸால் லைபீரிய மக்கள் பயத்தில் வசித்து வருகிறார்கள்.

பலி
எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதில் 1,100 பேர் லைபீரியாவைச் சேர்ந்தவர்கள்.

ஓட்டம்
லைபீரியாவை எபோலா அச்சுறுத்தும் வேளையில் அந்நாட்டைச் சேர்ந்த 6 உதவி அமைச்சர்கள், 2 துணை அமைச்சர்கள் மற்றும் 2 கமிஷனர்கள் வெளிநாட்டுக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் நோய்க்கு பயந்து தான் வெளிநாட்டுக்கு ஓடியதாக கூறப்படுகிறது.

திரும்பி வாருங்கள்
வெளிநாட்டுக்கு சென்ற அமைச்சர்கள் மற்றும் கமிஷனர்களை உடனே நாடு திரும்புமாறு கடந்த ஆகஸ்ட் மாதமே அவர்களுக்கு உத்தரவிட்டப்பட்டும் அவர்கள் வரவில்லை.

நெருக்கடி
நாடே நெருக்கடியில் இருக்க எந்த ஒரு காரணமும் இல்லாமல் வெளிநாட்டில் தங்கிய அமைச்சர்கள் மற்றும் கமிஷனர்களை லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் அதிரடியாக பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஒபாமா
எபோலாவை எதிர்த்து போராட உதவி செய்யுமாறு எல்லசன் ஜான்சன் சர்லீப் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications