லிட்டில் இந்தியா கலவரம்: இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 52 இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 8-ஆம் தேதி நிகழ்ந்த பேருந்து விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேலு என்பவர் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் மூண்டது.
அப்போது கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையின் கட்டளைக்கு பணிய மறுத்ததோடு, அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இந்தியர்கள் 52 பேரையும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் நாடு கடத்தும் செயலில் சிங்கப்பூர் அரசு இறங்கியுள்ளது.
சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, படிப்படியாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு யாரேனும் குந்தகம் விளைவிப்பது தெரியவந்தால், அவர்களை சிங்கப்பூரில் வெளியேறச் சொல்லும் உரிமை அரசுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications