விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

ரோம்: விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமல்ல... அது விடுதலைப் போராட்ட இயக்கமே என்று இத்தாலி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் தேசிய செயல் வீரர்கள் இத்தாலியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்து வழங்கினர்.

இது சர்வதேச பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரானது என தமிழ் தேசிய செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றமற்றவர்கள்

குற்றமற்றவர்கள்

அவர்கள் மீது கடந்த 2010 - ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011 - ம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருளாதாரம், சீரான ராணுவ கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விடுதலை அமைப்பே

விடுதலை அமைப்பே

எனவே இந்த இயக்கம் ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியது. எனவே, இந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயல் வீரர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க் குற்றம் புரிந்திருப்பின் அவற்றிற்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இத்தாலி மேல் நீதிமன்றம்

இத்தாலி மேல் நீதிமன்றம்

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து இத்தாலி அரசு மேல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதற்கான வழக்கு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

9 நீதிபதிகள் முன்னிலையில் அந்த விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

பயங்கரவாத அமைப்பல்ல

பயங்கரவாத அமைப்பல்ல

அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இதை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. எனவே, கீழ் கோர்ட்டு தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.

கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்பு

இதற்கிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு, மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்து கணிப்புநடத்த வேண்டும்" என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+