காலையில் நியூசிலாந்தை உலுக்கி எழுப்பிய நிலநடுக்கம்... ரிக்டரில் 6.4 ஆக பதிவு!
கிற்ஸ்ட்சர்ச்: நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தின் பெரிய நகரங்களில் கிறிஸ்ட்சர்ச்சும் ஒன்று. அதன் அருகே ஆர்தஸ் பாஸ் என்ற இடத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கு 6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறியதாக 30 அதிர்வுகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி எதிர்பார்த்தது போல் 4 மணி நேரம் கழித்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்ட் சர்ச் நகரம் கடும் நிலநடுக்கங்களுக்கு ஆளாகி வருகிறது. அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தனர்.
அங்கு இருந்த புராதன சின்னங்கள் அழிந்து விட்டன. பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து நகரமே தரைமட்டமானது. தற்போதுதான் அதை மீண்டும் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்குள் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் சேதம் குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை.
கடந்த 2011 பிப்ரவரியில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் இது இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என சொல்லப்படுகிறது. 2011 இல் நடந்த நிலநடுக்கத்தில் 185 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications