பயத்தில் இருந்த பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய விமான சிப்பந்தி

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: பெண் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்தி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநதர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கடந்த மாதம் உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகினர்.

Malaysia Airlines steward 'sexually assaulted' passenger

இதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பாரிஸ் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 20-ல் பயணம் செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பயத்தில் இருந்துள்ளார். அதாவது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மாயமாகிவிட்டது, மற்றொன்று சுட்டுத் தள்ளப்பட்டுவிட்டது இதற்கும் ஏதாவது ஆகுமோ என்ற பயத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் விமான தலைமை சிப்பந்தி அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுவது போன்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பயணி அளித்த புகாரின்போரில் பிரான்ஸ் போலீசார் அந்த சிப்பந்தியை கைது செய்தனர்.

ஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸின் பெயர் கெட்டுள்ள நிலையில் சிப்பந்தியின் செயல் அந்நிறுவனத்திற்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+