கோலாலம்பூரை மூடிய கடும் காட்டுத் தீ புகை.. பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 2 நாட்களாக காட்டுத் தீயால் சூழ்ந்துள்ள கடும் புகையால் கோலாலம்பூர் கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நாளையும், செவ்வாய்க்கிழமையும் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வயதானவர்கள், சிறார்கள், ஆஸ்துமா தொல்லை கொண்டோர் இந்த காட்டுத் தீயால் ஏற்பட்ட புகையால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட கடும் தீ காரணமாக இந்தப் புகை மண்டலம் மலேசியாவை சூழ்ந்து பெரும் பாதிப்பை மலேசியாவில் ஏற்படுத்தியுள்ளது.

Malaysia shuts schools as choking smog worsens

சில குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அமைச்சர் மஹதிர் காலித் கூறுகையில் கட்டுப்பாட்டைத் தாண்டி புகை அளவு உள்ளது. எனவே சிறார்களின் நலனைக் கருதி பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்ய விரும்புகிறோம். மாணவர்களின் கல்வியை விட சுகாதாரமே முக்கியம் என்பதால் விடுமுறை விட முடிவு செய்யப்பட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+