ரஜினி சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் டிவிட்டரில் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ரஜினியுடனான சந்திப்பை 'இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பீட்டாலிங்: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ரஜினியுடனான சந்திப்பை 'இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா இரண்டு நாட்கள் நடைபெறகிறது. நேற்று மலேசியா சென்றடைந்த நடிகர் ரஜினியை ரசிகர்கள் வரவேற்றனர்.
இன்று காலை நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது.

மலேசியாவில் வரவேற்பு
இதற்காக நேற்றே நடிகர் நடிகைகள் மலேசியா சென்றுவிட்டனர். மலேசியா சென்ற அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசிய பிரதமருடன் சந்திப்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் விமானத்தில் மலேசியா சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்து பேசினார்.

மிகப்பெரிய சந்திப்பு
இந்நிலையில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதாவது, மலேசியாவில் இன்று மீண்டும் ரஜினியுடன் மிகப்பெரிய சந்திப்பு என ரஜினியுடனான சந்திப்பை அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
|
தலைவா ரஜினிகாந்த்
மேலும் நடிகர் ரஜினிகாந்தை தலைவா என்றும் மலேசிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இங்கு உங்கள் நேரத்தை கொண்டாடுங்கள் என்றும் மலேசிய பிரதமர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

ரஜினி வீட்டில் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில் மலேசிய பிரதமருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் வந்த நஜிப் ரசாக் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications