மாலத்தீவு அதிபர் தேர்தல்: அப்துல்லா யாமீன் தோல்வி.. இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கரம் சேர்த்தவர்
மாலே: மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சாலி வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் மற்றும் எதிர்கட்சியான, மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் இப்ராஹிம் முகமது சாலி நடுவே கடும் போட்டி இருந்தது.
நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்ததுமே வாக்குப்பதிவு துவங்கியது. இதில் இப்ராஹிம் முஹமது சாலி 58.3 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சீனாவுக்கு நெருக்கம்
மொத்தம் 92 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகள் பெற்றார். தற்போது அதிபராக இருக்கும் அப்துல்லா யாமீன் 95,526 பெற்று தோல்வி அடைந்துள்ளார். அப்துல்லா யாமீன் இந்தியாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு நெருக்கமாகவும் செயல்பட்டவர் ஆகும். மாலத்தீவில் சீனா பல மில்லியன் டாலர் மதிப்புக்கு உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. இவ்வாறு அதிகமாக கடனை வாரி வழங்கி மாலத்தீவை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

சீன ஆதிக்கம்
இந்தியாவின் தென் மேற்கு கடல் பகுதியில் அமைந்துள்ளது மாலத்தீவு. இது கடல் வழி போக்குவரத்து மிக முக்கியமான ஒரு இடம் ஆகும். எனவே இங்கு சீனா ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவும் விரும்பவில்லை. ஆனால், அப்துல்லா யாமீன், சீனாவுக்கு ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் சீர்குலைப்பு
முன்னதாக தேர்தலை சீர்குலைக்க அப்துல்லா யாமீன் எவ்வளவோ முயற்சி செய்தார். எதிர்க்கட்சி தலைவர்களை அடக்கி ஒடுக்கினார். தேர்தல் ஆணையத்தில் தலையிட்டார். தேர்தலுக்கு முந்தைய நாள் எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களுக்கு காவல்துறையினரை அனுப்பி நெருக்கடிக்கு உள்ளாக்கினார். அரசு அலுவலர்களும், அவர்களது குடும்பத்தாரும் தனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று அவர் நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இவ்வளவுக்கு பிறகும், எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹமது சாலி வெற்றி பெற்றுள்ளார்.

கொண்டாட்டம்
அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சுமூகமான முறையில் அதிகார மாற்றத்தை, நிகழ்த்துவதற்கு அப்துல்லா யாமீன் உதவி செய்வார் என்று தான் நம்புவதாக இன்று அளித்த பேட்டி ஒன்றில் இப்ராஹிம் முஹமது சாலி தெரிவித்துள்ளார். இதனிடையே எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாலத்தீவு முழுக்க கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications