யு.எஸ்: 5,500 கிலோ மீன்களுடன் மனிதனை உயிரோடு சமைத்த கொடுமை!
மெக்சிகோ: அமெரிக்காவில் 5, 443 கிலோ டூனா மீன்களுடன் சேர்த்து மனிதர் ஒருவரை உயிருடன் சமைத்த பம்பிள் பீ புட்ஸ் நிறுவனம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோஸ் மெலினா. அவர் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சான்டா ஃபே நகரில் இருக்கும் பம்பிள் பீ புட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு அவர் அந்நிறுவனத்தில் உள்ள 35 அடி நீள அவனை(oven) சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவனுக்குள் ஜோஸ் இருப்பதை கவனிக்காத ஊழியர்கள் 5 ஆயிரத்து 443 கிலோ டூனா மீன்களை அதில் வைத்து சுவிட்சை ஆன் செய்துவிட்டனர். அவனுக்குள் மீனுடன் சேர்ந்து ஜோஸும் வெந்து இறந்துவிட்டார். டூனா மீனை சமைக்க 2 மணிநேரம் ஆகும். அப்போது அவன் 270 டிகிரி அளவுக்கு சூடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பம்பிள் பீ புட்ஸ் மற்றும் அதன் ஊழியர்கள் இருவர் மீது விதிமீறல் குற்றச்சாட்டு கடந்த திங்கட்கிழமை சுமத்தப்பட்டது.
சம்பவம் நடந்த கிளையின் தலைவர் மற்றும் பாதுகாப்பு மேனேஜர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications