அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
விர்ஜினியா: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் பல்கலைக் கழகம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பல்கலைக் கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியால் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து காயமடைந்த ஒருவரை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. வாகனங்களும் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
அண்மையில் லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 60 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications