மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இந்தியாவுக்கு வெற்றி!
நியூயார்க்: இந்தியாவின் நீண்ட போராட்டத்தை அடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளி மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என ஐநா சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர் தான் இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை நடந்ததற்கு முக்கிய காரணம் ஆவார்.
மசூத் அசார் பாகிஸ்தானில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் மற்றும் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற மூளைச்சலவை செய்து தீவிரவாத சம்பவங்களை நடத்தி வருகிறார்.

பாகிஸ்தான் மறுப்பு
இதனால் மசூத்அசாருக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் அவர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகிறது. இதனால் மசூத்அசார் வழக்கம் போல் சுதந்திரமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறார்.

தடுத்த சீனா
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும்படி ஐநா சபையில் போராடியது. பல ஆண்டுகளாக நடத்திய இந்த போராட்டத்தை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ஐநா சபையில் தடுத்தது.

சம்மதித்த சீனாவை
இதனிடையே தற்போது புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. முதலில் இதற்கு முட்டுக்கட்டை போட்ட சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.

ஐநா அறிவிப்பு
மசூத்அசாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிற வாசகங்களில் சில மாற்றங்களை செய்தால், சம்மதிக்கிறோம் என சீனா முன்வந்தது. இதையடுத்து ஐநா சபையில் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை இந்தியாவிற்கான ஐநா தூதர் சையத் அக்பரூதின் தெரிவித்துள்ளார்.

சசிதரூர் மகிழ்ச்சி
இதனிடையே 10 ஆண்டுகளாக மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா போராடியாகவும், தற்போது அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சசிதரூர் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications