மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இந்தியாவுக்கு வெற்றி!
நியூயார்க்: இந்தியாவின் நீண்ட போராட்டத்தை அடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளி மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என ஐநா சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர் தான் இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை நடந்ததற்கு முக்கிய காரணம் ஆவார்.
மசூத் அசார் பாகிஸ்தானில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் மற்றும் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற மூளைச்சலவை செய்து தீவிரவாத சம்பவங்களை நடத்தி வருகிறார்.

பாகிஸ்தான் மறுப்பு
இதனால் மசூத்அசாருக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் அவர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகிறது. இதனால் மசூத்அசார் வழக்கம் போல் சுதந்திரமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறார்.

தடுத்த சீனா
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும்படி ஐநா சபையில் போராடியது. பல ஆண்டுகளாக நடத்திய இந்த போராட்டத்தை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ஐநா சபையில் தடுத்தது.

சம்மதித்த சீனாவை
இதனிடையே தற்போது புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. முதலில் இதற்கு முட்டுக்கட்டை போட்ட சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.

ஐநா அறிவிப்பு
மசூத்அசாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிற வாசகங்களில் சில மாற்றங்களை செய்தால், சம்மதிக்கிறோம் என சீனா முன்வந்தது. இதையடுத்து ஐநா சபையில் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை இந்தியாவிற்கான ஐநா தூதர் சையத் அக்பரூதின் தெரிவித்துள்ளார்.

சசிதரூர் மகிழ்ச்சி
இதனிடையே 10 ஆண்டுகளாக மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா போராடியாகவும், தற்போது அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சசிதரூர் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications