மாலவி நாட்டு துணை அதிபரின் விமானம் திடீர் மாயம்.. 10 பேரின் கதி என்ன? பரபர தகவல்
லிலோங்வி: மாலவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென்று மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி நடந்து வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாக மாலவி உள்ளது. இந்த நாட்டின் அதிபராக லாசரஸ் சக்வீரா என்பவர் உள்ளார். துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா இருக்கிறார்.

இந்நிலையில் தான் நேற்று சவ்லோஸ் சிலிமா மேலும் 9 பேருடன் ராணுவ விமானத்தில் பயணம் செய்தார். மாலவி நாட்டின் தலைநகரான லிலோங்வியில் இருந்து அவர்கள் 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸுஸு சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்தில் திடீரென்று மாயமானது. அதாவது அந்த விமானம் தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரேடாரின் தொடர்பில் இருந்து விலகியது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிக்கு உத்தரவிடப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் விமானப்படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தற்போது வரை விமானம் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. இதனால் விமானத்தில் பயணித்த துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேரின் கதி என்ன ? என்பது தெரியவில்லை. இதற்கிடையே இந்த விமானத்தில் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்ளிட்டவர்கள் எங்கு சென்றனர்? என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின்போது இன்னொரு சோகமான தகவல் வெளியானது. அதாவத முன்னாள் அமைச்சர் ஒருவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சவ்லோஸ் சிலிமா உள்ளிட்டவர்கள் ராணுவ விமானத்தில் பயணம் செய்தனர். இந்த வேளையில் மோசமான வானிலை நிலவியதாகவும், இதனால் விமானம் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications