மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகலாம்: அமெரிக்க கடற்படை அதிகாரி

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் தேடல் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க கடற்படை அதிகாரி கேப்டன் மார்க் மேத்யூஸ் கூறுகையில்,

விமானம்

விமானம்

விமானம் எங்கு விழுந்தது என்று உறுதியாக தெரியவில்லை. அதனால் அகண்டு விரிந்த இந்திய பெருங்கடலில் தேடிக் கொண்டிருக்கிறோம். விமானத்தை இவ்வளவு பெரிய இடத்தில் தேட காலம் ஆகும்.

ஏர் பிரான்ஸ் 447

ஏர் பிரான்ஸ் 447

கடந்த 2009ம் ஆண்டு பிரேசில் அருகே நீரில் மூழ்கிய ஏர் பிரான்ஸ் 447 விழுந்த இடம் குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன.( ஏர் பிரான்ஸ் விமானத்தை கண்டுபிடிக்க 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆண்டுகள்

ஆண்டுகள்

மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியின் பேட்டரியின் ஆயுள் வரும் 8ம் தேதியுடன் முடிகிறது என்பதால் அதற்குள் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க ஆண்டுகள் ஆகலாம் என்று கேப்டன் மார்க் தெரிவித்துள்ளார்.

சீனர்கள்

சீனர்கள்

விமானத்தை தேடும் பணியில் மெத்தனம் காட்டுவதாக மலேசியா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் சீன பயணிகளின் உறவினர்கள் சிலர் நேற்று கோலாலம்பூரில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து விமானம் பற்றிய உண்மையை கூறுமாறு தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+