வாசகர்களின் ஆதரவைப் பெற்றாலும் மோடியை நிராகரித்த 'டைம்ஸ்' எடிட்டர்கள்!
நியூயார்க்: டைம் பத்திரிக்கையின் ஆண்டின் சிறந்த மனிதர் போட்டியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியேற்றப்பட்டுள்ளார். வாசகர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மோடியால் பத்திரிக்கையின் ஆசிரியர்களின் மனதை கவர முடியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிவிக்கும். இந்த ஆண்டும் டைம் பத்திரிக்கை வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது.
வாசகர்கள் 50 உலக தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் சிஇஓக்களில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்களித்தனர்.

வாக்கெடுப்பு
நவம்பர் 19ம் தேதி துவங்கிய வாசகர்கள் வாக்கெடுப்பு டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெற்றது. வாசகர்கள் வாக்களித்த 50 பேரில் ஒரே இந்தியர் பிரதமர் மோடி தான்.

மோடி
வாசகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் டைம் பத்திரிக்கை இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 50 லட்சம் வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றார்.

இறுதி பட்டியல்
டைம் பத்திரிக்கை ஆசிரியர்கள் இந்த ஆண்டின் சிறந்த மனிதர் போட்டிக்கான இறுதி பட்டியலை தேர்வு செய்துள்ளனர். 8 பேர் அடங்கிய அந்த பட்டியலில் மோடியின் பெயர் இல்லை. வாசகர்களை கவர்ந்த மோடியால் ஆசிரியர்களை கவர முடியாமல் போனது. இறுதி பட்டியலில் மோடியின் பெயர் இல்லாததை பார்த்து அவரது ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

டிம் குக்
இறுதி பட்டியலில் அலிபாபா குழும தலைவர் ஜாக் மா, எபோலா நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்கள், ரஷ்ய அதிபர் புதின், ஆப்பிள் சிஇஓ டிம் குக், பெர்குஷன் போராட்டக்காரர்கள். பாடகி டெய்லர் ஸ்விப்ட், தேசிய கால்பந்து லீக் கமிஷனர் ராஜர் ஸ்டோக் குடெல், குர்திஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர் மசூத் பர்சானி ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

நாளை அறிவிப்பு
2014ம் ஆண்டின் சிறந்த மனிதரை டைம் பத்திரிக்கையின் ஆசிரியர்கள் தேர்வு செய்து நாளை அறிவிப்பார்கள். டைம் பத்திரிக்கை 1927ம் ஆண்டில் இருந்து ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

காந்தி
1930ம் ஆண்டு டைம் பத்திரிக்கையின் அந்த ஆண்டின் சிறந்த மனிதராக மகாத்மா காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு இதுவரை ஒரு இந்தியர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications