உக்ரைனிலிருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் ஏற்க தயார் .. மால்டோவா உதவிக்கரம்

Subscribe to Oneindia Tamil

கிவ்: உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது அதிகாலை முதலே ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனில் வான்வழியாக தாக்குதல் நடத்திய நிலையில் அங்குள்ள விமான தளங்கள், ராணுவ தளங்களை ரஷ்யா அழித்துவிட்டது.

Moldova President says that they are ready to accomodate Ukraine people

இதனால் உக்ரைனில் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு தஞ்சமடைகிறார்கள். பலர் அந்த பகுதிகளில் இருந்து தப்பி பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள்.

இந்த நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மயா சண்டு உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+