இறந்துபோன ராணுவ வீரரின் ஆவி புகுந்த சிறுவன்- அமெரிக்காவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்து போன ஒரு ராணுவ வீரரின் ஆவியானது சிறுவன் ஒருவனின் உடலினுள் புகுந்து பேசும் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள்.
இப்போது அவருடைய ஆவி விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரு ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான்.
லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications