கழுதைக் காதுகள்... எதிர்காலம் கருதி மகனைக் கொன்ற ‘பேய்’... துருக்கியில் பயங்கரம்!
அங்காரா: துருக்கியில் காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனைக் கொலை செய்த தாயைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
துருக்கி தலைநகரான அங்காராவைச் சேர்ந்தவர் நுரே சகான்(37). இவரது 10 வயது மகனுக்கு காதுகள் பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த நுரே, மருத்துவர்களின் ஆலோசனைப் படி மகனுக்கு காதில் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டார்.

ஆனபோதும், மகனது காதுகள் சிறிதாகவில்லை என நுரேவுக்கு தோன்றியது. இதனால், மனமுடைந்த நுரே தனது மகனை மருத்துவமனையின் கழிப்பறைக்குள் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
பின்னர், கார் மூலம் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார் நுரே. ஆனால், எதிர்பாராத விதமாக நுரேயின் கார் விபத்தில் சிக்கி, மீண்டும் அதே மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
இதற்கிடையே, நுரேயின் மகனின் சடலத்தை கழிப்பறையில் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் நுரேயைக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக, நுரேயிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மகனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘அந்த ராட்சத காதுகளால் என் மகன் மிகவும் அசிங்கமான தோற்றத்தை பெற்றிருந்தான். வருங்காலத்தில் அனைவரும் அவனை கேலி செய்தால் சங்கடப்படுவான் என்பதற்காகவே நான் கருணைக்கொலை செய்தேன்' என நுரே தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications