அணு உலை அழிந்த பகுதியில் “கோணையாய்” பூக்கும் பூக்கள் - மரபுப் பிழையால் ஜப்பானில் அதிர்ச்சி!
டோக்கியோ: ஜப்பானில் அணு உலைகள் அழிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பு அங்கு பூக்கள் பூத்துக் குலுங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவை மரபுப் பிறழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது.
ஜீன் மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பம் என்று விஞ்ஞானிக் கூறியுள்ளனர்.
இதன் தாக்கம் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியாமல் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தீப்பிடித்து எரிந்த அணு உலைகள்:
ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள ஃபுகுஷிமா அணுஉலைகள் தீப்பிடித்து அழிந்தன.

அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்:
உலகின் மோசமான அணு உலை அழிவாக அறியப்படும் இச்சம்பவத்திற்குப் பிறகு அங்கே வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

விகாரமான பூக்கள்:
நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அப்பகுதியில் மரபுபிறழ்ந்த விகாரமான உருவமுடைய பூக்கள் பூத்துள்ளன.

மரபுப் பிழை பூக்கள்:
ஜப்பானியர் ஒருவர் சமீபத்தில் அங்கே பூத்திருந்த மரபு பிறழ்ந்த பூக்களை படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த பூக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பார்க்கவே முடியலையே:
மொன்னையாக, நடுவில் பெரிய மகரந்தப் பைகள், விகாரமான உருவமுடைய பழங்கள் என்று பார்க்கவே ஏதோ செய்கின்றன.

நீங்காமல் நினைக்க வைக்கும் பாதிப்பு:
அணு உலை அழிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பும் அதன் பாதிப்பு இன்னும் அப்பகுதியில் இருப்பதை இந்த பூக்கள் நினைவுபடுத்துகின்றன. இதே போன்று வடிவ மாற்றங்களுடன் பழங்களும் பழுக்கின்றன.

ஹார்மோன் மாற்றங்கள்:
ஹார்மோன் மாற்றங்களால் இதன் வளர்ச்சியில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களுக்கு நோ எண்ட்ரி:
"ரெட் ஸோன்" ஆக கருதப்படும் இப்பகுதி மனிதர்கள் வாழ தகுந்தது இல்லை என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருப்பது, குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications