இது மார்ஸ் லெவல் திட்டம்.. செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்பும் நாசா!
செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது.
Recommended Video
நியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு நாசா ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக நகர்ந்து இது ஆய்வு செய்யும். இதனால் தற்போது ரோபோ தேனீக்களை பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது.
என்ன பிரச்சனை
இதன் வேகம்தான், இதன் பிரச்சனை, இது தகவல்களை அனுப்ப பூமிக்கு அதிக நேரம் பிடிக்கிறது. அதே சமயம் இது நகர அதிக எரிபொருள் எடுத்துக் கொள்கிறது. மேலும் சமயங்களில் ரோவர் அனுப்பும் தகவல்கள் சரியாக இருப்பதில்லை. இதனால் இதை கைவிட முடிவு செய்துள்ளனர்.
தேனீ
இதற்காகத்தான் தற்போது ரோபோட் தேனீக்களை அனுப்புகிறார்கள். இந்த தேனீக்கள் 4 லிருந்து 3 சென்டிமீட்டர் வரைதான் அளவு இருக்கும். இந்த நேனோ தேனீதான் செவ்வாய் கிரகத்தை வலம்வர உள்ளது. இதில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனியிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்கலாம்.
செவ்வாயில் பறக்கும்
இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதனால் இதன் பறக்கும் வேகமும், முறையும் எளிதாக இருக்கும். இதனால் இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும். அதேபோல் அங்கு மிகவும் குறைந்த அளவில் காற்று வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.
வசதி
20 க்கும் மேற்பட்ட ரோபோ தேனீக்களை இப்படி அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த தேனீக்கள் கொஞ்ச நேரத்திற்குத்தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ரோவர் ஒன்றை அனுப்புவார்கள். அந்த ரோவரை வைத்து எல்லா தேனீக்களையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ரோவருக்கு ஆகும் எரிபொருள் செலவை விட இதற்கு குறைவாகவே ஆகும்.