நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,000ஐ தொடும்: நேபாள ராணுவ தளபதி
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரிக்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 நொடிகள் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்க செய்தி அறிந்தவுடன் இந்தியா தான் முதல் நாடாக நேபாளத்திற்கு மீட்பு குழு, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது.
நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டம் ஆகியுள்ளன.

பலி
நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கும் என்று நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தொடும் என்று அஞ்சப்படுவதாக நேபாள ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

நில அதிர்வுகள்
நிலநடுக்கம் ஆழமாக ஏற்பட்டிருந்தால் நில அதிர்வுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் நேபாளத்தில் மேலோட்டமாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் சனிக்கிழமையில் இருந்து தினமும் பல முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. அதில் சில அதிர்வுகள் சக்திவாய்ந்ததாக உள்ளன. நேற்று மட்டும் மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

மீட்பு பணிகள்
தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகளாலும், அவ்வப்போது பெய்யும் கனமழையாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்படுகிறது. பல குக்கிராமங்களுக்கு செல்லும் வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை. அத்தகைய இடங்களில் மக்களே இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.

சிறுவன்
வியாழக்கிழமை மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து பெம்பா லாமா என்ற 15 வயது சிறுவனை உயிருடன் மீட்டனர். 5 மணிநேரம் போராடி நுவாகோட்டைச் சேர்ந்த சிறுவனை காப்பாற்றினர். முன்னதாக இடிபாடுகளில் இருந்து 4 மாத ஆண் குழந்தை காப்பாற்றப்பட்டது. காத்மாண்டு பேருந்து நிலையம் அருகே கிருஷ்ண தேவி கட்கா என்ற பெண் இடிபாடுகளில் இருந்து நேற்று உயிருடன் மீட்கப்பட்டார்.

கோபம்
பல்வேறு இடங்களில் மக்கள் அரசு மீது கடுங்கோபத்தில் உள்ளனர். மீட்பு பணிகள் திருப்தி அளிக்கவில்லை என்று கூறும் அவர்கள் பசியாலும், தாகத்தாலும் தவித்து வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications