ஹூட் ஹூட் புயலால் நேபாளத்தில் உண்டான பனிப்புயல் - பலி எண்ணிக்கை 39 ஆனது
காட்மண்ட்: நேபாள பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீசிச் சென்ற ஹூட் ஹூட் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவை சீர் குலையச் செய்தது. புயலின் பாதிப்பு மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அங்கு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

ஹூட் ஹூட் புயலின் தாக்கத்தால் நேபாளத்திலும் கனமழையும், அதனைத் தொடர்ந்து பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட விபத்துக்களும் உண்டானது.
அந்தவகையில், கடந்த வாரம் அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களையொட்டி, இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலைப்பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது. இதனால், பனிப்பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி அப்பகுதியில் மலையெறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியர் உட்பட 30 பேர் பலியானார்கள். தொடர்ந்து மாயமானவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
பனிப்புயல் வீசும் போது இப்பகுதியில் சுமார் 150 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, மீட்புப் பணியில் 4 ஹெலிகாப்டர் உதவியோடு நேபாள ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பனிமலையில் சிக்கித் தவித்த 41 பேரை உயிருடன் மீட்கப் பட்டனர். மேலும், 9 சடலங்களும் மீட்கப் பட்டுள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
பனிச்சரிவில் சிக்கி, சுமார் 5,416 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதியில் தவித்துக் கொண்டிருந்த சுமார் 350 பேர் இதுவரை உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர்.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் ஒரு மீட்டர் அடர்த்தி கொண்ட பனிப்பொழிவு ஏற்பட்டதால் மீட்பு நடவடிக்கைகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், தற்போது, பனி மெல்ல உருகத் தொடங்கியுள்ளதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெறும் என நம்புவதாகவும் மீட்புப் படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications