சிட்னியில் கொல்லப்பட்ட இந்தியப் பெண்ணுடன் கடைசி நேரத்தில் பேசிய மர்ம நபர் யார்?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் குத்திக் கொல்லப்பட்ட இந்தியப் பெண் பொறியாளருடன் மர்மநபர் ஒருவர் பேசுவது போன்ற புதிய சிசிடிவி காட்சிகளைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கொலையாளி குறித்து துப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பெண் பொறியாளர் பிரபா அருண்குமார் (41). இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பணி புரிந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபாவை, சிட்னியின் புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மீட்டில் உள்ள பாராமட்டா பூங்காவில் மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
பெங்களூருவில் வசித்து வரும் தனது கணவருடன் போனில் பேசியபடி வந்தபோது தான் பிரபா கொல்லப்பட்டார். தன்னை விட்டு விடும்படி கொல்ல வந்தவரிடம் பிரபா கெஞ்சியதைப் போனில் கேட்டதாக பிரபாவின் கணவர் அருண் குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

ரவுடிகள் தான் காரணமா?
பாராமட்டா பூங்கா அருகே எப்போதும் முகாமிட்டிருக்கும் சில ரவுடிகள் அவ்வழியே செல்பவரை மடக்கி பணம் பறிப்பது வழக்கம். அது போன்ற ஒரு திருடன்தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என வெஸ்ட்மீட் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீசார் கோரிக்கை...
மேலும், இந்த கொலையைப் பற்றி யாருக்காவது ஏதேனும் பின்னணி தகவல்கள் தெரிந்திருந்தால் அதை போலீசாரிடம் பகிர்ந்து வழக்கின் விசாரணையில் உதவும்படி உள்ளூர் மக்களுக்கும் பாராமட்டா பகுதி போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

புதிய வீடியோ காட்சிகள்...
இந்நிலையில், போலீசாருக்கு சிசிடிவியில் பதிவான புதிய வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. அதில், மர்மநபர் ஒருவர் பிரபாவுடன் பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. பிரபாவுடன் பேசும் அந்த மர்மநபர் யார் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

அடையாளம் காணும் பணி...
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரிச்சி சிம் கூறுகையில், "அந்த மர்ம நபர் யார் என்பது இதுவரை அடையாளம் தெரியவில்லை. அவர் குறித்து தொடர்ந்து விசாரித்தபடி உள்ளோம். ஆனால் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை .

சிசிடிவி காட்சிகள்...
இந்த வீடியோ படம் சமீபத்தில்தான் கிடைத்தது. கொலை நடந்த இடத்தை தீவிரமாக சோதனையிட்டபோது இந்த சிசிடிவி வீடியோ படம் கிடைத்தது" என்றார்.

மங்களூருவில் விசாரணை...
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக ரகசிய போலீஸ் ஏஜென்டுகள் சிலர் பிரபாவின் சொந்த ஊரான மங்களூருக்கு செல்லவுள்ளனர். மங்களூரில் சிலரை விசாரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று சிம் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications