அடக் கருமமே... இப்படிச் செய்யலாமா "குழந்தை"?
சியோல்: தென் கொரியா என்னதான் பொறுத்துப் பொறுத்துப் போனாலும் அதை வறுத்து வட கறி போடுவதிலேயே குறியாக இருக்கிறது இந்த வட கொரியா. இப்போது கூட பாருங்கள், ஒரு நாற்றத்தனமான வேலையைச் செய்து தென் கொரியர்களை கடுப்பாக்கியுள்ளது.
தென் கொரியா, வட கொரியா இடையிலான ஆயுத யுத்தத்தை விட தற்போது பிரசார யுத்தம்தான் பெரிதாகி வருகிறது. இரு தரப்பும் வினோதமான, வித்தியாசமான பிரசார யுத்தத்தில் குதித்துள்ளன.
அதில் வடகொரியா சற்று கருமத்தனமாக இறங்கியிருப்பது தென் கொரியர்களை கடுப்பாக்கி வருகிறது.

பலூன் மூலம் கடுப்பைக் கிளப்பும் வட கொரியா
வட கொரியாவிலிருந்து தற்போது தென் கொரியாவை நோக்கி ஏகப்பட்ட பலூன்களை வட கொரியர்கள் அனுப்பி தென் கொரியர்களை டீஸ் செய்து வருகின்றனர்.

உள்ளே இருக்கும் கருமம்
பலூன்தானே என்று நினைக்கக் கூடாது. அதற்குள் டாய்லெட்டில் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பேப்பர்கள், டிஷ்யூ பேப்பர்கள், நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் ஆகியவற்றைப் போட்டு ரொப்பி அனுப்பி வைக்கிறார்கள்.

பயோ கெமிக்கல் அட்டாக்கோ இருக்குமோ
முதலில் இந்த பலூன்களில் உயிரி வேதிப் பொருட்களை வைத்து வட கொரியர்கள் தாக்குதல் நடத்துகிறார்களோ என்று தென்கொரியா அஞ்சியது. ஆனால் பலூனைப் பார்த்த பிறகுதான் வட கொரியர்களின் விஷமம் தெரிய வந்தது.

துண்டுப் பிரசுரம்
அத்தோடு அந்த பலூன்களில் துண்டுப் பிரசுரங்களையும் வைத்து அனுப்பியுள்ளனர். அதில் வடகொரியாவுக்கு எதிரான நிலையை கைவிடுங்கள். அந்த மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். தேவையில்லாமல் போரைத் தூண்டாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தென் கொரிய அதிபரைத் திட்டியும்
தென் கொரிய அதிபர் பார்க் க்யூன் ஹை-யை திட்டியும் பிரசுரம் போடப்பட்டுள்ளது. இவரை முதலில் விரட்ட வேண்டும். இவரால்தான் இரு கொரியாக்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
லூசுப் பயலுக
இதுகுறித்து தென் கொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இது அறிவற்ற, முதிர்ச்சியற்ற செயல். இதனால் எல்லாம் எங்களை உசுப்பேத்த முடியாது என்றார்.
"குழந்தை"க்கு வர வர குசும்புத்தனம் ஜாஸ்தியாகிட்டுதான் போகுது!












Click it and Unblock the Notifications