பட்டுப் புடவை, நகை, மேக்கப்பும் இல்லீங்க... பாட்டியின் காட்டன் புடவையில் அசத்திய மணப்பெண்
திருமணம் என்றாலே மணப்பெண் பட்டுப்புடவை, நகை நட்டுகளால் அலங்காரம் செய்திருக்க வேண்டும் என்ற மரபை வங்கதேச பெண் ஒருவர் மாற்றி காட்டியுள்ளார்.
டாக்கா: திருமணத்தன்று மணப்பெண் பட்டுப்புடவை உடுத்தி, நகைகளை அள்ளி போட்டு இருக்கும் மரபை வங்கதேச மணப்பெண் ஒருவர் மாற்றியுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் தஸ்னிம் ஜாரா. ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளிக்கும் ஒரு அறக்கட்டளையின் தலைவராவார். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

வெரி சிம்பிள்
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் மணப்பெண்ணுக்கான அலங்காரம் இல்லாமல் பட்டுப்புடவை அணியாமல், நகை அணியாமல் ரொம்ப சிம்பிளாக இருந்தார்.

காட்டன் புடவையில்
ஜாரா தனது திருமணத்தின்போது தனது பாட்டியின் காட்டன் புடவையில் காட்சியளித்தார். இதுவரை இப்படி ஒரு நிலையில் எந்த ஒரு மணப்பெண்ணையும் நாம் பார்த்திருக்க மாட்டோம். அலங்காரம், உடை உள்ளிட்டவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமே தவிர மணப்பெண் அலங்காரம் இல்லாமல் இருக்க மாட்டார். இதுதான் பாரம்பரியம்.

பாரம்பரியத்தை தகர்த்த
அந்த பாரம்பரியத்தை ஜாரா தகர்த்தெறிந்தார். இவரது திருமண புகைப்படம் பதிவேற்றம் செய்த நாளிலேயே தான் அலங்காரம் செய்து கொள்ளாததற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் ஜாரா கூறுகையில், ஏராளமான மேக்கப்புகள், அதிக எடை கொண்ட உடை, ஏராளமான நகைகள் ஆகியவற்றை மணப்பெண் அணியும் ஒரே கோலத்தை பார்த்து பார்த்து எனக்கு பிடிக்கவில்லை.

பொருளாதார நிலையை காட்டாது
இதுபோல் பட்டுப்புடவை, நகை அணிந்தால் மட்டுமே தாங்கள் பொருளாதார ரீதியில் நன்றாக இருக்கிறோம் என்பதை காட்டாது. இது முழுக்க முழுக்க மணப்பெண்ணின் விருப்பத்துக்கு மாறானது. பெண்ணுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் செய்யுங்கள். அதனால் எந்த வித நன்மையும் அந்த பெண்ணுக்கு ஏற்படாது.

கணவர் பச்சைக் கொடி
நான் மணப்பெண் அலங்காரம் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியபோது எனது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர். பாரம்பரியத்தை மாற்றக் கூடாது என்றும் கூறினார். இதுகுறித்து என்னை திருமணம் செய்ய இருந்த கேலதிடம் கேட்டதற்கு அவர் எந்த நிபந்தனையுமின்றி ஓகே சொல்லிவிட்டார் என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications