எக்ஸ்கியூஸ் மீ ஒன்லி 3 குண்டுகள்தான்.. ஒட்டுமொத்த உலகத்துக்கும் சங்குதான்.. பீதி கிளப்பும் வடகொரியா!
வடகொரியாவிடம் தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் இருப்பதாக அந்நாட்டின் கவுரவ குடிமகனும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியுமான பெனோஸ் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா: வடகொரியாவிடம் தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் இருப்பதாக அந்நாட்டின் கவுரவ குடிமகனும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியுமான பெனோஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 குண்டுகளை போட்டாலே போதும் உலகமே அழிந்துவிடும் என்று கூறிய அவர், உலக நாடுகள் வடகொரியாவை சீண்ட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனால் அமெரிக்கா தனது போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை அறிந்த வடகொரியா அமெரிக்காவின் விமான தாங்கி கப்பலை தங்களால் வீழ்த்த முடியும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஸ்பேயின் நாட்டைச் சேர்ந்தவரும் வடகொரியாவின் கவுரவ குடிமகனாகிய அலிஜாண்ட்ரோ கவோடி பெனோஸ் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

உலகை அழிக்கும் குண்டுகள்
அப்போது வடகொரியாவை யாரும் சீண்ட வேண்டாம் என்றும், அவ்வாறு சீண்டினால் உலகை அழிக்கும் குண்டுகள் அவர்களிடம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பெனோஸ் வடகொரியாவின் கவுரவ குடிமகன் என்றும் மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார உறவு வைத்திருக்கும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதி மற்றும் வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வமற்ற தூதர் என்றும் கூறப்படுகிறது.

ஏவுகணைகள் மூலம் பாதுகாப்பு
யாரும் வடகொரியாவை சீண்ட வேண்டாம் என்றும் அவர்களை தொட்டால் துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் மூலம் அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வார்கள் என்றும் பெனோஸ் தெரிவித்துள்ளார்.

போரிட நேர்ந்தால் இழப்பு நேரிடும்
மேலும் சீனா, அமெரிக்காவுடன் இணைந்து போரிட நேர்ந்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார்.
கிம் ஜாங் கடந்த 2012- ஆம் ஆண்டிலிருந்த தனது அணு ஆயுதவலிமையை பலப்படுத்தி வருவதாகவும், வடகொரிய மக்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.

3 தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் போதும்
இதனால் வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறினால் உங்களுக்குத் தான் இழப்பு என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களிடம் தெர்மோநியூக்ளியர் குண்டு இருக்கிறது, அதில் மூன்று குண்டுகள் போட்டால் போதும் உலகமே அழிந்து விடும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications