புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவு.. வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு
புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு வட கொரியா 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.
பியாங்யங்: கியூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மறைவிற்கு, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் வடகொரியா நாடு அறிவித்துள்ளது.
கியூபாவின் முன்னாள் அதிபராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. புரட்சியாளரான இவர், 90 வயதான நிலையில் நேற்று முன் தினம் கியூபாவில் காலமானார். இவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டு பின்னர், அவரது சாம்பல் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வட கொரியா பிடல் காஸ்ட்ரோவின் மறைவிற்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரசு அலுவலகங்களின் வெளியே வட கொரியாவின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். வரும் புதன்கிழமை வரை காஸ்ட்ரோவின் மறைவுக்கு வட கொரியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னதாக, பிடல் காஸ்ட்ரோ உயிரிழந்த செய்தி அறிந்த உடன் வட கொரிய அரசு சார்பாக இரங்கல் செய்தி பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications