கோடாரியால் வெட்டி துண்டு துண்டாக்கிடுவோம்: பிரான்ஸின் லீ கெனார்ட் என்செய்ன் பத்திரிக்கைக்கு மிரட்டல்
பாரீஸ்: சார்லி ஹெப்டோவை அடுத்து உங்கள் ஊழியர்களை தாக்கப் போகிறோம் என்று பிரான்ஸில் உள்ள மற்றொரு பத்திரிக்கையான லீ கெனார்ட் என்செய்னுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 2 தீவிரவாதிகள் 12 பேரை சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் பிரான்ஸின் மிகப்பெரிய நையாண்டி வார பத்திரிக்கையான லீ கெனார்ட் என்செய்னுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் கூறியிருப்பதாவது,
இது உங்கள் முறை. உங்களின் பத்திரிக்கையாளர்கள் கோடாரியால் துண்டு துண்டாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1915ம் ஆண்டு துவங்கப்பட்ட என்செய்ன் பத்திரிக்கை அரசியல், வியாபாரம் குறித்த ஊழல்கள், ஜோக்குகள் மற்றும் கார்டூன்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பெயர் போனது.
சார்லி ஹெப்டோவை விட அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கை என்செய்ன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications