ஒபாமா, அபுதாபி இளவரசர் சந்திப்பு: ஏமன், ராணுவ தளவாடங்கள் பற்றி ஆலோசனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யானை திங்கட்கிழமை சந்தித்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ராணுவ தளவாடங்கள் தேவைப்படுவது உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒபாமா, இளவரசர் சந்திப்பின்போது ஏமன், ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ராணுவ தளவாடங்கள் தேவைப்படுவது பற்றியும் அவர்கள் கலந்தாலோசித்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் அமெரிக்கா தலைமையிலான அணியில் அமீரகமும் உள்ளது.
மேலும் ஏமனில் ஈரான் உதவியுடன் செயல்படும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையில் போராடும் நாடுகளில் அமீரகமும் அடக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் 13ம் தேதி ஒபாமா வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைவர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்து மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் விஷயங்கள் குறித்து பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications