தலையே சுத்துது.. இறைச்சியைவிட 3 மடங்கு அதிகமாம் வெங்காய விலை.. பிலிப்பைன்ஸ் துயரம்
வெங்காய விலை உயர்வால் பிலிப்பைன்ஸ் மக்கள் சிக்கி கொண்டுள்ளனர்
மணிலா: பிலிப்பைன்சில் இறைச்சியை விட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகமாகி உள்ளதாம்.. இதனால், அந்நாட்டு மக்கள் கலங்கி போய் உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி இலங்கையை மட்டுமல்ல, பாகிஸ்தானை மட்டுமல்ல, உலக நாடுகளையும் வெகுவாக பாதித்து வருகிறது.. இதற்கெல்லாம் பிரதான காரணம் உக்ரைன் -ரஷ்யா போர் ஆகும்.
அதன் தாக்கம்தான் பிலிப்பைன்ஸிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பொருளாதாரம் சரிந்துள்ளது.. பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது..

காய்கறி
இதனால், உணவுப் பொருள்களின் விலை எகிறி வருகிறது. இதில், வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.. குறிப்பாக, பெரிய வெங்காயம் 3 மடங்கு விலை அதிகமாக விற்கிறார்களாம்.. மேலும், உள்நாட்டு உற்பத்தியும், விநியோகமும் குறைந்து வருகிறது.. அதனால், அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 தொன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன..

பூண்டு
தென்கிழக்கு ஆசிய நாட்டை பொறுத்தவரை, அவர்களுக்கு வெங்காயம்தான் மிக மிக முக்கியமான உணவாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பூண்டு உள்ளது.. எனவே, பிலிப்பைன்ஸில் மட்டும், மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் தொன் காய்கறிகள் தேவைப்படுகிறது... ஆனால் வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்கு 650 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ 11,395.09) என்ற விலையில் பிலிப்பைன்ஸில் விற்கப்படுகிறது. இது நம்முடைய இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.950 ஆகும்..

மாட்டிறைச்சி
அதாவது, ஒரு கிலோ வெங்காயம் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது அங்கு அந்நாட்டில் விற்கப்படும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை விட மூன்று மடங்கு அதிகமாம்.. பதுக்கல் போன்ற நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலைவாசி உயர்வு அதிகரிக்க இதுவே பிரதானமான காரணமாக அமைந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் கடும் விழிபிதுங்கி உள்ளனர்.. அவசர கால வெங்காய இறக்குமதி மூலம் அடுத்த மாதம் அங்கு விலை கட்டுக்குள் வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கல்கள்
ரஷ்யா-உக்ரைன் போர், விநியோக சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.. இதன் தாக்கம்தான் பிலிப்பைன்சிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், என்ன கொடுமை என்றால், ஒரு கிலோ வெங்காயம் வாங்க வேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளதாம்..
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications