எங்கள் மீது தாக்குதலா? ஐநாவிடம் முறையிட பாகிஸ்தான் முடிவு.. சீனா ரியாக்சன் இதுதான்!
இந்தியா பாகிஸ்தான் மண்ணில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது குறித்து ஐநா சபையில் பாகிஸ்தான் முறையிட முடிவெடுத்து உள்ளது.
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் மண்ணில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது குறித்து ஐநா சபையில் பாகிஸ்தான் முறையிட முடிவெடுத்து உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளையும் உதவிக்கு அழைக்க உள்ளது.
இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதல் பாகிஸ்தானை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசனை செய்து வருகிறது.

புகார்
பாகிஸ்தான் நாடு சார்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து ஐநாவின் கவுன்சிலில் புகார் அளிக்க உள்ளார். காலையில் குரேஷி நடத்திய ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் பாகிஸ்தான் இதற்காக கடிதம் எழுத உள்ளது.

நட்பு நாடுகள்
அதேபோல் பாகிஸ்தான் தன்னுடைய நெருங்கிய நட்பு நாடுகளுக்கும் இதுகுறித்து புகார் அளிக்க போகிறது. சீனா, சவுதி ஆகிய நாடுகளுக்கு முதற்கட்டமாக தங்கள் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாகிஸ்தான் புகார் அளிக்க முடிவெடுத்து உள்ளது. இவர்களை பாகிஸ்தான் உதவிக்கு அழைக்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சீனா என்ன
இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் பேசுகையில், நாங்கள் இந்த பிரச்சனையை கவனித்து வருகிறோம். தெற்கு ஆசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிக முக்கியமான நாடுகள். இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்பும், புரிந்துணர்வும்தான் ஆசியாவில் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும்.

இரண்டு நாடுகள்
இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சனை ஏற்படும். இரண்டு நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை சேர்ந்து எடுக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதே பலரின் நோக்கம்., என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications