இம்ரான் கான் போருக்கு ரெடி என்கிறார்.. வெளியுறவு அமைச்சரோ பேசலாம்னு சொல்றார்.. பாக். டபுள் ஆக்ட்!
Recommended Video
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்றும் போர் தொடுக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ள நிலையில் வெளியுறவு துறை அமைச்சரோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியிருப்பது அந்நாட்டின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இது பாகிஸ்தானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
உலக நாடுகளை எல்லாம் தனக்கு ஆதரவு அளிக்க கேட்டு அவமானப்பட்டது பாகிஸ்தான். ஏனெனில் சீனா தவிர்த்து ஏனைய நாடுகள் அனைத்தும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி கதவை மூடிக் கொண்டது.

பாகிஸ்தான் பிரதமர்
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றும் இந்தியாவே வெற்றி பெற்றது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை சாதாரணமாக விடமுடியாது என்றும் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் போர் தொடுக்கவும் தயாராக உள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அமைச்சர்
மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால் காஷ்மீர் மீதான நடவடிக்கையை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவரது கருத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மாமூத் குரேஷி மாறுபடுகிறார்.

இந்தியா
இதுகுறித்து அவர் கூறுகையில் இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வேண்டாம் என சொன்னதில்லை. எனினும் பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலை இந்தியா உருவாக்குவது போல் எங்களுக்கு தெரியவில்லை.

நாட்டின் இரட்டை வேடம்
காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தான், இந்தியா , காஷ்மீர் மக்கள் ஆகியோரை சேர்ந்தது. எனவே வீட்டுக் காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டவுடன் நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. நேரடியாக போர்தான் என கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் நாட்டு அமைச்சரோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை என கூறியிருப்பது அந்நாட்டின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications