Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிமை பாகிஸ்தான் அரசு.. இந்தியாதான் “கெத்து” - மோடி அரசின் துணிச்சல்! புகழ்ந்து தள்ளிய இம்ரான் கான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் எளிதாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

பாகிஸ்தானுடன் சுதந்திரம் பெற்ற நாடான இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை சுதந்திரம் மிக்கதாகவும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீது அதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடிவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுக்கு பாராட்டு

இந்தியாவுக்கு பாராட்டு

இம்ரான் கான் தனது உரையில், "நான் இந்தியாவை உதாரணமாக எடுக்கிறேன். அந்த நாடு நம்மோடு சுதந்திரம் பெற்றது. அதன் வெளியுறவு கொள்கைகளை பாருங்கள். இந்தியாவுக்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை உள்ளது. ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் தனது முடிவில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

அமெரிக்கா அழுத்தம்

அமெரிக்கா அழுத்தம்

உக்ரைன் உடனான போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கொடுத்து வரும் அழுத்தங்களை மீறி இந்தியா தனது தேச நலனில் அக்கறை கொண்டு ரஷியாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர்

குவாட் கூட்டமைப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருந்தாலும், நாட்டு மக்கள் மீது நலன் கருதி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. பாகிஸ்தானில் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் தலைமையிலான ஆட்சி அமைத்து 7 மாதங்களாகியும் நாட்டின் பொருளாதார, அரசியல் குழப்பங்கள் தீரவில்லை.

மக்கள் நலன்

மக்கள் நலன்

பணவீக்க நடவடிக்கையின் காரணமாக பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 7 மாதங்கள் கடந்து இருக்கிறது. பாகிஸ்தான் அரசாங்கம் மக்களின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி இருக்கிறார். இதற்கு முன்பாகவும் 2, 3 முறை இந்திய அரசை இம்ரான் கான் பாராட்டி இருக்கிறார்.

ரஷ்யாவிடம் எண்ணெய்

ரஷ்யாவிடம் எண்ணெய்


கடந்த அக்டோபர் மாதமும் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கையை பாராட்டி பேசி இருந்தார் இம்ரான் கான். "புது டெல்லியால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்திட முடிகிறது. ஆனால், பாகிஸ்தானோ மேற்கத்திய நாடுகளுக்கு அஞ்சி அடிமையாக மாறி மக்கள் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்க மறுக்கிறது.

அடிமை பாகிஸ்தான்

அடிமை பாகிஸ்தான்

நாட்டின் முடிவுகளை நாட்டிற்கு உள்ளேயே எடுக்க வேண்டும். ரஷியா குறைவான விலைக்கு எண்ணெய் தருகிறது என்றால், என் நாட்டு குடிமகனை காக்க வாய்ப்பு இருந்தால் எங்களிடம் எதுவும் கேட்க முடியாது. எங்களிடம் யாரும் எதுவும் சொல்லக்கூடாது. இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குகிறது. அடிமை பாகிஸ்தானுக்கு அனுமதி இல்லை.

சுதந்திரம் வேண்டும்

சுதந்திரம் வேண்டும்

நான் சுதந்திரமான நாட்டை பார்க்க விரும்புகிறேன். நீதி வெல்ல வேண்டும். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாகிஸ்தானில் சாமானியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தங்கள் நாட்டை காக்க அவர்கள் அனைத்து விதமான தியாகங்களையும் செய்வார்கள்.

ஆட்சி கலைப்பு

ஆட்சி கலைப்பு

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறிய இம்ரான் கான், தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கவின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். எப்போதெல்லாம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இம்ரான் கான் விமர்சிக்கிறாரோ அப்போதெல்லாம் அவர் இந்தியாவை பாராட்ட தவறுவது இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+