எல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்திய ராணுவத்தின் எந்தவொரு சவாலையும் ஏற்க தயாராக இருக்கிறோம் என அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபூர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துக்கு வித்திடும் 370 சட்டப்பிரிவு அண்மையில் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான், சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான், உலக நாடுகளை அணுகி, ரகசிய விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தது. அது போல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை பாகிஸ்தானும், சீனாவும் அணுகி ரகசிய விசாரணை நடத்த கோரியது.

பாகிஸ்தான்
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் ஆகும். இதில் 3ஆவது நபர் தலையிடுவது கூடாது என தெரிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தியாவின் எந்த சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு செல்
காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை ஷாமுகமது குரோஷி ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை குறித்து அவர் கூறுகையில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் சிறப்பு காஷ்மீர் செல் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை
காஷ்மீர் பிரச்சினை உலக அளவில் கொண்டு செல்ல முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார். இந்த ஆலோசனை குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொந்தளிப்பு
அவர் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. நாங்கள் அந்த தாக்குதலை சந்திக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம். முழு அளவில் தயாராக உள்ளோம். எல்லையில் போதுமான அளவுக்கு படைகளை நிறுத்தியுள்ளோம். காஷ்மீர் விவகாரம் இரு நாட்டிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய பிரச்சினையாகும் என்றார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications