கண்ணாடியில் கூட பாகிஸ்தானின் முதல் பெண்மணி புகைப்படம் தெரியாது.. பாக். பிரதமர் அலுவலக பணியாளர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவியும் பாகிஸ்தான் முதல் பெண்மணிமான புஷ்ரா பிபி புகைப்படம் வீட்டு கண்ணாடியில் கூட தெரியாது என பிரதமர் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் பிரதமருமான் இம்ரான் கான் பிரதமர் ஆவதற்கு ஆறு மாதத்திற்கு முனபு அதாவது கடந்த 2018ம் ஆண்டு பூஷா பிபி என்பவரை திருமணம் செய்தார். புஷ்ரா பிபி முன்னதாக கவார் மனேக்கா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தநிலையில் 2017ம் ஆணடு விவாகரத்து செய்தார். பின்னர் அவர், 2018ம் ஆண்டு இம்ரான் கானை காதலித்து திருமணம் செய்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவி என்பதால் புஷ்ரா பிபி அந்நாட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் மணி என்று போற்றப்படுகிறார்.
சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் தனது மனைவி புஷ்ரா பிபி உடன் கலந்து கொண்டார். அங்கு யாருமே அவரது முகத்தை பார்க்க முடியவில்லை. காரணம், புஷ்ரா பிப் தலை முதல் கால்வரை புர்கா அணிந்து தான் விழாவில் பங்கேற்று இருந்தார்.
பீர் குடிக்க வந்த நல்ல பாம்பு.. கேனுக்குள் தலை மாட்டிக்கொண்ட பரிதாபம்.. குடிகாரர்கள் அட்டூழியம்
இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், புஷ்ரா பிபி குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புஷ்ரா பிபி யின் முகம் வீட்டின் கண்ணாடியில் கூட தோன்றாது. அவர் முகத்தை கண்ணாடி கூட பார்க்க முடியாது என்று வியப்புடன் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் புஷ்ரா பிபி இஸ்லாம் மத நம்பிக்கையை அவ்வளவு தீவிரமாக பின்பற்றுபவர் என்று கூறுகிறார்கள்.