நவாஸ் செரீப் வீட்டு மயிலை வேட்டையாடிய பூனை- 3 போலீசார் சஸ்பென்ட்
Subscribe to Oneindia Tamil
லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் பண்ணை வீட்டில் வளர்க்கப்பட்ட மயிலை பூனை ஒன்று வேட்டையாடிய காரணத்துக்காக 3 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பண்ணை வீடு லாகூர் புறநகரில் உள்ளது. அங்கு மயில் உள்ளிட்ட பல பறவைகள், விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகி்ன்றன. இவற்றைக் கவனிக்க மட்டும் 21 போலீசார் நியமிக்கப்பட்டு்ள்ளனர்.
கடந்த வாரம் நவாஸின் பண்ணை வீட்டில் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி பாதுகாப்பு பணிக்கு போடப்பட்டிருந்த 21 போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பூனை ஒன்றுதான் மயிலை இரவோடு இரவாக வேட்டையாடியது தெரியவந்தது.
இருப்பினும் பணியில் அலட்சியமாக இருந்த காரணத்தில் அன்றைய இரவுப் பணியில் இருந்த 3 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications