பதன்கோட் தாக்குதல்: 'அடையாளம் தெரியாத நபர்கள்' மீது பாக். எப்.ஐ.ஆர்! மவுலானா எஸ்கேப்
இஸ்லாமாபாத்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானதளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதல் பிரச்சினையில், பாகிஸ்தான் காவல்துறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில், இந்தியா சுட்டிக்காட்டிய ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார் பெயரை சேர்க்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்திற்குள், புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். 3 நாட்கள் தொடர்ந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு, 6 பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஊடுருவிய 5 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதற்கும், அதன் தலைவர் மவுலானா மசூத் அசார் இத்தாக்குதலின் மூளை என்றும், ஆதாரங்களை திரட்டி பாகிஸ்தானிடம் அளித்தது இந்தியா.

இருப்பினும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் பாக். அமைதி காத்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தூங்குவதை போல நடிப்பதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பதன்கோட் தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானிலுள்ள குஜ்ரன்வாலா தீவிரவாத எதிர்ப்பு காவல் நிலையத்தில், 302,324,109 & 7ATA ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆரில் யாருடைய பெயருமே குற்றவாளி என குறிப்பிடப்படவில்லை. தாக்குதலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், மவுலானா ஆசாத்தை தப்பவைக்க பாக். முயலுவது அம்பலமாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications