என் அரசை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர்.. அமெரிக்காவிலிருந்து ப.சிதம்பரம்
வாஷிங்டன்: அமெரிக்கா வந்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மீண்டும் மக்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ளார்.
அங்கு அவர் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, வருகிற லோக்சபா தேர்தலில் மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் கூறியதாவது...

மீண்டும் ஆதரவு தருவார்கள்
இந்திய மக்கள், என் அரசுக்கு மீண்டும் வாக்களித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பல காரியங்கள் செய்துள்ளோம்
கடந்த ஓராண்டில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எனது அரசு எடுத்துள்ளது.

2வது பாதியில் பலன் தெரியும்
இந்த சீர்திருத்தங்களுக்கு நடப்பு நிதியாண்டின் 2வது பாதியில் பலன் தெரியும் என்று எதிர்பார்க்கிறோம்.

பெரும் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோம்
கடந்த பத்து ஆண்டுகளில் இருந்த வளர்ச்சியை விட அதிக அளவிலான வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பிராந்திய கட்சிகளால் பாதிப்பில்லை
இந்தியாவில் பிராந்திய கட்சிகள் வளர்ச்சி அடைவதால் தேசிய அளவில் எந்தப் பாதிப்பும் வராது. அதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்.

ஏன் வருகின்றன இந்தக் கட்சிகள்
தேசியக் கட்சிகள், பிராந்தியப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதால்தான் பிராந்தியக் கட்சிகள் வளர்கின்றன, வருகின்றன.

இந்தியா வித்தியாசமான நாடு
இந்தியா ஒரு வித்தியாசமான நாடு. பலவிதமான கட்சிகள், விருப்பங்கள், செயல்பாடுகளைக் கொண்ட கலவையான நாடு என்றார் அவர்.
-
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications