பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவு
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஞயாற்றுக்கிழமையான இன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏராளமான தீவுகளை கொண்ட நாடான பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், அதன்பின்னர் ஏற்பட்ட சுனாமி மிகப்பெரிய உயிரிழப்பு மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு பலமுறை பிலப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 2004 பாதிப்பு போல் ஏற்படவில்லை.
இந்நிலையில் பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டோனோவ் (Mindanao) என்ற தீவில் தாவோ என்ற நகரம் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. இதில் ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை












Click it and Unblock the Notifications