மாயமான மலேசிய விமானத்தின் பைலட்களில் ஒருவர் தற்கொலை?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விமானிகள் தற்கொலை செய்ய வேண்டி விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய சம்பவங்கள் முன்பு நடந்துள்ளன. ஆனால் விமானி தற்கொலை செய்யத் தான் விமானத்தை எங்காவது கொண்டு போய் விபத்துக்குள்ளாக்கினார் என்பதை விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்தது இல்லை.
விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டபோதும் தற்கொலை தான் காரணம் என்பதை மட்டும் யாரும் வாய் திறந்து கூறவில்லை.

மலேசிய விமானம்
239 பேருடன் மாயமாகியுள்ள மலேசிய விமானத்தில் இருக்கும் இரண்டு விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர் தற்கொலை செய்ய விமானத்தை எங்காவது மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

1999
1999ம் ஆண்டு எகிப்து ஏர் விமானம் 990 அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள நான்டுக்கெட் தீவுக்கு அருகே அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 217 பேரும் பலியாகினர். விமானத்தில் இணை விமானி கமீல் எல் படோட்டி ஆட்டோ பைலட்டை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, விமானத்தை கீழ் நோக்கி செலுத்தியுள்ளார். அப்போது அவர் நான் கடவுளை நம்புகிறேன் என்று மட்டும் 11 தடவை கூறியுள்ளார்.

தற்கொலை
விமானி கமீலின் செயலால் தான் விமானம் கடலில் விழுந்தது என்றாலும் அதற்கு காரணம் தற்கொலை என்ற வார்த்தையை மட்டும் யாரும் பயன்படுத்தவில்லை. எகிப்து அதிகாரிகளோ விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று தெரிவித்துவிட்டனர்.

1997
1997ம் ஆண்டில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து 104 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய சில்க்ஏர் விமானம் 185 விபத்துக்குள்ளான காரணம் குறித்து முரண்பாடுகள் உள்ளன. போயிங் 737 ரக விமானமான அது வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்று அமெரிக்கா நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இந்தோனேசிய அதிகாரிகள் நடத்திய விசாரணை முடிவே பெறவில்லை.

மொசாம்பிக்
மொசாம்பிக் ஏர்லைன் விமானம் ஒன்று தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான அங்கோலா செல்லும் வழியில் வேண்டும் என்றே கீழ் நோக்கி வந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர். ஆனால் அது குறித்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா
பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 2012ம் ஆண்டுடன் நிறைவடைந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 758 விமானங்கள் விபத்துக்குள்ளாகின. அதில் 8 விமானங்கள் மட்டுமே விமானிகள் தற்கொலை செய்ய விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications