22 இந்தியர்களுடன் நைஜீரியாவில் மாயமான கப்பல் விடுவிப்பு.. கடற்கொள்ளையர்களுடன் பரபர பேச்சுவார்த்தை!
நைஜீரியாவில் காணாமல் போன மும்பையை சேர்ந்த எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

கினியா: மும்பையை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் கடந்த வாரம் காணாமல் போனது. இது எப்படி காணாமல் போனது என்று கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தார்கள்.
இதற்கு நைஜீரிய அரசு உதவியையும் கூட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. கடற்கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
தற்போது இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

மாயமான கப்பல்
மும்பையில் இருக்கும் 'ஆங்கிலோ -ஈஸ்டர்ன்' கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் கடந்த பிப்ரவரி 1ம் தேதி காணாமல் போனது. அந்த கப்பல் 13,500 டன் கேஸ் எரிபொருளை சுமந்து சென்று இருக்கிறது. இதில் 22 இந்தியர்களும், சில வெளிநாட்டினரும் பயணித்துள்ளனர்.

யார்
முதலில் இந்த கப்பலுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பின் இந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பேரம்
கடந்த 3 நாட்களாக இதற்காக பேரம் பேசப்பட்டது. அவர்கள் கேட்ட தொகை கடைசியில் அந்த மும்பை கப்பல் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது. எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை.
|
சுஷ்மா சுவராஜ்
இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் டிவிட் செய்துள்ளார். அதில் ''காணாமல் போன மெர்சண்ட் கப்பலில் இருந்த 22 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்னொரு டிவிட்டில் நைஜீரிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications