ஜப்பானில் மே இறுதிவரை அவசரநிலை நீட்டிப்பு.. கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் பிரதமர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து அந்த நாட்டு பிரதமர் ஷின்சே அபே உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜப்பானில் 47 மாகாணங்களில் ஊரடங்கு நீட்டிக்கும் உத்தரவு வெளியானது. ஜப்பானில் கொரோனா வைரஸால் 14,877 பாதிக்கப்பட்டுள்ளனர். 487 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 3,981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சினையால், அது ஒத்தி வைக்கப்பட்டது.
ஜப்பான் போன்ற குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடே, லாக்டவுனை நீட்டித்துள்ள நிலையில், இந்தியாவில் லாக்டவுன் தளர்வு காரணமாக சாலைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்












Click it and Unblock the Notifications