பூங்காவில் வைத்து 16 வயசுப் பையனுடன் 28 வயது இந்திய வம்சாவளி ஆசிரியை உறவு.. கைது!
அமெரிக்காவில் பூங்காவில் வைத்து 16 வயது மாணவனுடன் 28 வயது முன்னாள் டீச்சர் தகாத உறவு வைத்திருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

நியூ ஜெர்சி: அமெரிக்காவில் பூங்காவில் 16 வயது மாணவனுடன் 28 வயது முன்னாள் டீச்சர் தகாத உறவு கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பெனிங்டன்னில் உள்ள பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அலிசியா மரி ரெட்டி (28) என்ற இந்திய வம்சாவளி ஆசிரியை பணியாற்றி வந்தார்.
பால்டிமோரில் வசித்து வரும் இவர் கடந்த 2016-2017-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவனுடன் நெருங்கி பழகினார். நாளடைவில் இது காதலாக மாறியது.

பூங்காவில் உறவு
இதையடுத்து அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த சிறுவனுடன் தகாத உறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தவுடன் போலீஸில் அந்த டீச்சர் மீது கடந்த மாதம் புகார் கொடுத்துவிட்டது பள்ளி நிர்வாகம்.

போலீஸ் கைது
பின்னர் மாணவனின் பெற்றோருக்கும் இதுகுறித்து தகவல் அளித்துவிட்டது. இந்நிலையில் டீச்சரின் இந்த அருவருப்பான செயலை விசாரித்து வந்த போலீஸார் அவரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

முதல் முறையாக புகார்
அவர் பால்டிமோரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்த டீச்சரின் மீது இதுமாதிரியான புகார்கள் எழுந்ததில்லை என்று பழைய இடத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வம்சாவளி
ஆசிரியை அலிசியா ரெட்டி இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலமாகும். இதுபோல அங்கு ஆசிரியைகள் கைதாவது புதிதல்ல என்பதால் அலிசியா விவகாரமும் அதில் ஒன்றாக இணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications