இந்தியாவின் இப்போதைய மத சகிப்பு தன்மையை பார்த்தால் காந்தி ஷாக் ஆகி விடுவார்: ஒபாமா சர்ச்சை பேச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்திருந்தால், மகாத்மா காந்தி மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது: இந்தியாவின் சமய சகிப்புத்தன்மை புண்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சில இடங்களில் சமய சகிப்புத்தன்மை என்பது குறிப்பிட்ட சில பிரிவினரின், சமய நம்பிக்கை, கலாச்சாரம் இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது போல் உள்ளது.

Religious intolerance in India would have shocked Mahatma Gandhi, says Obama

இதுபோன்ற நிகழ்வுகள் , மத சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளை அதிர்ச்சியடை வைத்திருக்கும். இவ்வாறு ஒபாமா கூறினார்.

குடியரசு தின விழாவில் பங்கேற்க 3 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. பின்னர் 27ம் தேதி டெல்லியில் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் இந்தியா,நம்பத்தகுந்த , அழகான நாடு, இந்திய அரசியல் சட்டத்தின், 25வது பிரிவானது, அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை வளர்த்துக்கொள்ளவும் சுதந்திரம் அளிக்கிறது, என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+