இந்தியாவின் இப்போதைய மத சகிப்பு தன்மையை பார்த்தால் காந்தி ஷாக் ஆகி விடுவார்: ஒபாமா சர்ச்சை பேச்சு
வாஷிங்டன்: இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்திருந்தால், மகாத்மா காந்தி மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது: இந்தியாவின் சமய சகிப்புத்தன்மை புண்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சில இடங்களில் சமய சகிப்புத்தன்மை என்பது குறிப்பிட்ட சில பிரிவினரின், சமய நம்பிக்கை, கலாச்சாரம் இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது போல் உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் , மத சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளை அதிர்ச்சியடை வைத்திருக்கும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்க 3 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. பின்னர் 27ம் தேதி டெல்லியில் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் இந்தியா,நம்பத்தகுந்த , அழகான நாடு, இந்திய அரசியல் சட்டத்தின், 25வது பிரிவானது, அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை வளர்த்துக்கொள்ளவும் சுதந்திரம் அளிக்கிறது, என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications