இன்னும் 20 வருடங்களில் 35 சதவீதம் ரோபோக்கள்தான் - வேலை போகும் நிலையில் லண்டன்வாசிகள்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகில் இன்னும் இருபது ஆண்டுகளில் 35 சதவீத பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் என்று ஆய்வில் அபாய தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2035 ஆம் ஆண்டுக்குள் முப்பத்தைந்து சதவீத பணியிடங்களை ரோபோக்கள் நிரப்பும் என தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்கள் போன்றோரின் வேலைகளுக்கு ரோபோக்கள் வராது எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Robots have put 1.3 million Londoners' jobs at risk

வேலை பறிபோகும் அபாயம்:

விற்பனை, கட்டுமான மற்றும் கணக்குப்பதிவு போன்ற துறைகளில் தற்போது பணிபுரிவோரின் வேலைகளை ரோபோக்களே செய்ய வேண்டி வரும் என்பதால் அத்துறையில் உள்ளவர்களது வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.

செய்ல்பாடு அவசியம்:

இது ஒருபக்கம் புதிய வேலைவாய்ப்புகளையும், மறுபக்கம் வேலை இழப்புகளையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இவ்வாறு நிஜமாகவே நடக்கும்போது வேலையிழப்பைத் தடுக்கவில்லை என்றால், கல்வியாளர்களும், நாட்டின் செயல் திட்டங்களை வடிவமைப்போரும் இதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம்.

அட்டவணை வெளியீடு:

பிரபல பி.பி.சி. நிறுவனம் எந்தெந்த வேலைகள் ரோபோக்கள் செய்யலாம் அல்லது செய்யாது என்கிற அட்டவணை வெளியிட்டுள்ளது.

ரோபோக்கள் உலகம்:

அதன்படி தொலைபேசி மூலம் விற்பனை, டைப்பிஸ்ட், சட்டத்துறைச் செயலர், நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகப் பணிகள் ரோபோக்களின் வசம்போக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

அறிவு வளர்த்துக் கொள்ளுங்கள்:

இது இங்கிலாந்து மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் நடைமுறையாக வாய்ப்பிருப்பதால், நாமும் பல்வேறு துறைக்கான அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+