சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 44 பேர் பலி; 60 பேர் படுகாயம்
டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்யா நடத்திய விமான தாக்குதலில் 44 பேர் பலியாகியுள்ளனர். 60 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் சுமார் 2,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக ப்ரீ சிரியா ஆர்மி என்ற கிளர்ச்சிக் குழு அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இக்குழு அல்லாமல் அல் நூஸ்ரா என்ற அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அத்துடன் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனால் சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ரஷ்ய படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் விமான தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications