பாம்புகளை வேண்டும் என்றே கடிக்க விட்ட மருத்துவர்கள்.. விஷ முறிவு மருந்துக்காக இப்படி ஒரு பரிசோதனை
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் வேண்டுமென்றே பாம்புகளை தன்னை கடிக்க அனுமதித்திருக்கிறார். இதன் மூலம் பாம்பு கடிக்கு எதிரான மருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
டிம் ஃப்ரீட் என்பதுதான் அவரது பெயர். டிம் கடந்த 2001ம் ஆண்டு முதல் முறையாக பாம்பு கடியால் பாதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிர் காப்பாற்றப்பட்டது. இருப்பினும், அவருடைய உடலில் சில மாற்றங்களை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதாவது அவரது உடல், பாம்புக்கடிக்கு எதிராக ஆன்டிபாடி எனும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது.

இதனையடுத்து 'சென்டிவாக்ஸ்' எனும் நிறுவனம் இவரை தொடர்புகொண்டது. இந்நிறுவனம் மருத்துவ துறையை சேர்ந்த நிறுவனமாகும். பாம்புக்கடிக்கு எதிரான மருந்தை இது உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் டிம்-ஐ வாடகைக்கு எடுக்கிறது. இவரது உடலில் பாம்பு விஷத்தை செலுத்தி, அனைத்து வகை பாம்புகளுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குவதே இதன் நோக்கம். லேசான கரியமா இது? கொஞ்சம் விஷம் ஏறினாலும் மனுஷன் காலி.
இருப்பினும், இந்த முயற்சியை நிறுவனம் சிறப்பாக செய்து பார்த்தது. அதாவது மிக மிக பாதுகாப்பான முறையில் பாம்பின் விஷம் டிம் உடலில் செலுத்தப்பட்டது. பாம்புகளை கடிக்க வைப்பதன் மூலம் விஷம் செலுத்தப்பட்டது. இப்படி செலுத்தியபோது ஒருமுறை விஷம் அதிகமாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் கோமாவில் இருக்க வேண்டியதாயிற்று. பின்னர் எப்படியோ அவரது உயிரை காப்பாற்றினார்கள். இதனையடுத்து இப்போது அவருக்கு பாம்பின் விஷம் செலுத்தப்படுவதில்லை.
ஆனால் இதுவரை செலுத்தப்பட்ட விஷம் அவரது உடலில் அற்புதமான ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆன்டிபாடிகளை வைத்து விஷமுறிவு மருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கருப்பு மாம்பா, நாகம், டைப்பன், கிரைட் உள்ளிட்ட 13 வகை பாம்புகளுக்கு எதிராக 100% செயல்படுகிறது. இது தவிர 6 வகை பாம்புகளுக்கு பகுதியளவு பாதுகாப்பையும் கொடுக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இது எப்படி செயல்படுகிறது என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். அதாவது பாம்பு கடியில் வரும் விஷம், முதலில் நரம்பு மண்டலத்தைதான் தாக்கும். இப்படி தாக்கும்போது நம்முடைய ரத்தம் உறைந்துவிடும். அப்படி நடந்தால் இதயத்திற்கு ரத்தம் போகாமல் நாம் உயிரிழந்துவிடுவோம். ஆனால், இந்த விஷ முறிவு மருந்து ரத்தத்தை உறையவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதன் மூலம் உயிர் காப்பாற்றப்படுகிறது. இந்த விஷ முறிவு மருந்தின் சந்தை மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்.
இது உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பாம்புகடியிலிருந்து பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications