ஃபேஸ்புக்கில் மன்னர் பற்றி அவதூறு – தாய்லாந்து பாடகருக்கு 15 ஆண்டு சிறைதண்டனை!
Subscribe to Oneindia Tamil

தாய்லாந்து நாட்டில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் 86 வயது அதுல்யாதேஜ் மன்னராக இருக்கிறார். அந்நாட்டு சட்டப்படி மன்னரையோ அவரது குடும்பத்தினரையோ அவமதித்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
இருப்பினும் 28 வயதான தாய்லாந்து பாடகர் ஒருவர் 2010,11ஆம் ஆண்டுகளில் மன்னராட்சியை விமர்சித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அந்த பாடகருக்கு மன்னராட்சியை அவமதித்ததற்காக 15 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத் தீர்ப்பினைத் தொடர்ந்து அந்த பாடகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications