மடகாஸ்கரை தொடர்ந்து தான்சானியாவில் ஆமை கறி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து 7 பேர் பலி- அதிபர் இரங்கல்!
ஜான்சிபார்: மடகாஸ்கரைத் தொடர்ந்து தான்சானியாவின் ஜான்சிபார் தீவுகளில் ஆமை கறி சாப்பிட்டதால் குழந்தை உட்பட 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆமைக் கறி சாப்பிட்டதால் உயிரிழந்தவர்களுக்கு ஜான்சிபார் அதிபர் Hussein Mwinyi ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலோர நாடுகளில் வசிக்கும் மக்கள் ஆமை கறி சாப்பிடுவது இயல்பானது. கடல் பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் தவிர்க்க இயலாத சூழலில் ஆமை கறியை சாப்பிட நேரிடுவதும் உண்டு.

தான்சானியா ஆமை கறி விருந்து
மடகாஸ்கர், தான்சானியா போன்ற நாடுகளில் நாம் கோழி, ஆடு வெட்டி விருந்து வைப்பது போல ஆமை கறி விருந்து வைக்கும் நடைமுறை உண்டு. தான்சானியாவின் ஜான்சிபார் தீவுகளில் உள்ள பெம்பா என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று ஒரு வீட்டில் ஆமை கறி விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து மரணம்
இந்த விருந்துக்கு அடுத்த நாள் ஆமை கறி சாப்பிட்டவர்களில் 3 வயது குழந்தை முதலில் உயிரிழந்தது. அதே நாள் இரவில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 4 பேர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து ஆமை கறி விருந்தில் பங்கேற்ற 38 பேர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இளைஞர்களுக்கு பாதிப்பு இல்லை
இது தொடர்பாக தான்சானியா மருத்துவர்கள் கூறுகையில், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடலில் ஆமை கறி விஷத்தன்மையை ஏற்படுத்தி இருப்பதுதான் காரணம். அதேநேரத்தில் திடகாத்திரமான உடல் வலிமை கொண்ட இளைஞர்களை ஆமை கறி பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆமை கறி மரணம்- அதிபர் இரங்கல்
ஆமை கறி சாப்பிட்டு உயிரிழந்தவர்களுக்கு ஜான்சிபார் அதிபர் Hussein Mwinyi இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், பெம்பாவில் ஆமைக்கறி சாப்பிட்டு விஷமானதால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் இதேபோல் ஆமை கறி விருந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஆமை கறி சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தனர். ஆமை கறி சாப்பிட்டவர்கள் உயிரிழக்க நேரிடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications